திருவில்லிபுத்தூர்,பிப்.20- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் ராமராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரி சத்திய சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ரேகா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,அதிகாரிகள் பணி யாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 23 மன்ற பொருள்கள் வைக்கப்பட்டு அனைத்து தீர்மானங்களும் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது.