districts

img

மாதர், வாலிபர், மாணவர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

விருதுநகர்,ஏப்.29- கல்லூரி மாணவிகளை தவ றான பாதையில் வழிநடத்த முயன்ற   வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று விருதுநகர்  மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது.

அதேநேரம், இவ்வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது  குற்றவாளிகளான உதவிப் பேரா சிரியர் முருகன், ஆராய்ச்சி மாண வர் கருப்பசாமி ஆகியோரை, உரிய  ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை  என்று நீதிமன்றம் விடுவித்துள்ளது.  

விருதுநகர் மாவட்டம் அருப்  புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர் நிர் மலாதேவி. கடந்த 2018 ஏப்ரல் 15  அன்று அதே கல்லூரியில் பயிலும்  மாணவியரை பாலியல் ரீதியாக தவ றான பாதைக்கு அழைக்கும் வகை யில் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி தமிழ்நாட் டில் பெரும் அதிர்வலையை ஏற்  படுத்தியது. அன்றைய ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பெயரும் இதில் அடிபட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்  கக்கோரி  இந்திய மாணவர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அருப்  புக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2018 ஏப்ரல் 16 அன்று  நிர்மலா தேவியை கைது செய்தனர். 2018 ஏப்ரல் 17 அன்று இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபி சிஐடி போலீசார், நிர்மலாதேவியை நீதிமன்ற காவலில் எடுத்து விசா ரிப்பதற்காக, அவரை சாத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இந்த மோசமான செயலில் ஈடுபட்ட  உயர் அதிகாரிகள் உட்பட அனை வரையும் கைது செய்ய வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாத்தூரிலும் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப் பட்டது.

இதையடுத்து, 2018 ஏப்ரல் 24  அன்று மதுரை காமராசர் பல்க லைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். ஆய்வு மாணவர் கருப்பசாமி 25-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். கைது செய்யப்பட்ட 3  பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
2018 ஜூலை 13 அன்று நிர்மலா  தேவி வழக்கில் 1160 பக்கங்கள்  கொண்ட முதற்கட்ட குற்றப்பத்தி ரிக்கையை சிபிசிஐடி போலீசார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர். மேலும்  2018 செப்டம்பர் 7 அன்று இரண்டா வது கட்டமாக 200 பக்கங்கள்  கொண்ட குற்றப்பத்திரிக்கையை யும் தாக்கல் செய்தனர். திருவில்லி புத்தூரில் உள்ள  மாவட்ட மகளிர்  விரைவு நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கின் எதிரிகளாக கருதப்படும் பேராசிரியை  நிர்மலா தேவி. உதவிப் பேராசிரியர் முரு கன், ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோரிடமும் வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவி கள், அவர்களது பெற்றோர், அருப்  புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகி கள், பேராசிரியர்கள் மற்றும்  மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் உயர் அதிகாரிகள், பேராசி ரியர்கள் என சுமார் 104 பேரிடம் நீதி மன்றம் விசாரணை மேற்கொண் டது.

தீர்ப்பு
இந்நிலையில் ஏப்ரல் 29 திங்க ளன்று இந்த வழக்கில் நீதிபதி பக வதி அம்மாள் தீர்ப்பளித்தார். அப்போது, உதவிப் பேராசிரியர்  முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த  ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாததால் அவர்களை விடு தலை செய்வதாக அறிவித்த நீதிபதி,  பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து நிர்மலா  தேவியின் வழக்கறிஞர், தண்டனை  குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்க  வேண்டும் எனவும், இதுகுறித்து சில ஆதாரங்களை நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க கால அவகாசமும் கோரினர்.  இதற்கு அரசு தரப்பு  வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், ஒரு நாள் அவகாசம் அளித்த நீதிபதி பகவதியம்மாள், ஏப்ரல் 30 பிற்பகல் 2:30 மணி  அளவில் தண்டனை விவரங்கள்  அறிவிக்கப்படும் என்று அனுமதி  வழங்கினார். இதன்படி நிர்மலா தேவிக்கு இன்று தண்டனை விவ ரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

10 ஆண்டு வரை சிறை 
இதுகுறித்து நீதிமன்ற வளா கத்தில் பேட்டியளித்த அரசுத் தரப்பு  வழக்கறிஞர், நிர்மலா தேவிக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக் கும் என்று தெரிவித்தார்.