திருவில்லிபுத்தூர், ஏப்.1- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதியாக மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த சேகர், உறுப்பினர்களாக சேலத்தைச் சேர்ந்த சாந்தி ஆண்டியப்பன், மதுரையைச் சேர்ந்த சௌந்தரராஜன் ஆகிய மூவரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.