districts

img

ரயில்வேயை தனியார்மயப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் மாவட்டங்களில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூன் 14- பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசானது, ரயில்வேயை தனியார்மயமாக்க முடிவு செய்து, செவ்வாயன்று கோவையிலிருந்து ஷீரடி வரை தனியார் நிறுவனம் ரயிலை இயக்கு கிறது. இதனைக் கண்டித்து தட்சிண  ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் ரயில் நிலையம்  முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு கிளைத் தலைவர் எம்.சுந்த ரம் தலைமையேற்றார். துவக்கி வைத்து கோட்ட பொருளாளர் சர வணன் பேசினார். போராட்டத்தை ஆதரித்து வங்கி ஊழியர் சங்கத்தின் மாரிக்கனி பேசினார். முடிவில் சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா கண்டன உரையாற்றினார். மேலும் இதில், ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராமன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை
டிஆர்இயூ - சிஐடியு ரயில்வே தொழிலாளர் சங்கம் மதுரை கோட்  டம் சார்பில் மதுரை கிழக்கு நுழைவு  வாயில் அருகில் கோட்ட பொருளா ளர் பி.சரவணன் தலைமையில் கண்  டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். தெய்வராஜ் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் மா.  கணேசன், சங்கத்தின் துணைப்  பொதுச் செயலாளர் எம். சிவக்  குமார், கோட்ட இணைச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன், ஏஐஎல் ஆர்எஸ்ஏ நிர்வாகி ஆர். கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். கோட்ட உதவித் தலைவர் பி.  ஜெயக்ராஜசேகர் நன்றி கூறினார்.

இராமேஸ்வரம்
இராமேஸ்வரத்தில் கிளை செய லாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் ஏ.சுடலைக்காசி எம்.கருணா மூர்த்தி, டிஆர்இயூ சங்கத்தின் கோட்ட தலைவர் ஆன்ட்ரன் மற்றும்  துணைத் தலைவர் காளிதாஸ் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்
சிஐடியு மற்றும் டி.ஆர்.இ.யு. சார்பாக திண்டுக்கல் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டு ராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ஆர் .கணே சன், மாவட்ட தலைவர் கே பிரபா கரன் ,மதுரை கோட்ட டி.ஆர்.இ.யு. தலைவர் சங்கரநாராயணன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். பாலமுருகன் நன்றி கூறினார்.