திருவில்லிபுத்தூர், ஜூலை 12 திருவில்லிபுத்தூர் பெருமாள் பட்டியில் வசிப்பவர் பழனி குமார் (வயது 32) இவர் இப்பகுதியில் சைக்கிள் கடை வைத்துள்ளார். மேலும் இவர் ஜோதிடம் திருஷ்டி பரிகார பூஜைகள் செய்து வந்துள்ளதாக கூறப்படு கிறது இந்த நிலையில் பழனி குமாரிடம் திருவில்லிபுத்தூர் பத்ர காளியம்மன் நகர் மாரியப்பன் காம்பவுண்டில் வசிக்கும் பாலமுருகன் என்பவரது மனைவி தங்க மாயாள் (வயது 42) என்பவர் நகர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ள தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பழனி குமாரை அணுகியுள்ளார் . அதன்பின் பழனி குமாரும் அவரது மனைவி ரம்யாவும் உங்கள் வீட்டில் தங்க நகைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தால் கணவனின் நோய் குணமாகும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பிய தங்க மாயாள் தங்க நகைகளை பழனி குமாரிடம் கொடுத்துள்ளார் ஆனால் பழனி குமார் பூஜை செய்துவிட்டு தங்க நகைகளை திருப்பி தரவில்லை. இதே போல் பழனி குமார் ,ரம்யா தம்பதி யர் பலபேரிடம் நகை மோசடி செய்துள்ளனர் .மொத்த நகைகளின் மதிப்பு 74 பவுன் ஆகும் என்று கூறப்படுகிறது. நகைகளை இழந்த அனைவரும் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி குமார், அவரது மனைவி ரம்யாவை யும் கைது செய்து, நகைகளை மீட்டனர்.