districts

img

ஒரே மரத்தில் விளைந்த 6 வகை மாம்பழங்கள் வியப்பை ஏற்படுத்திய விருதுநகர் தோட்டக் கலைத்துறை

விருதுநகர், ஏப்.4-  விருதுநகர் மாவட்டத் தோட்டக் கலைத் துறையினர் ஒரே மரத்தில் 6 வகையான மாம்பழங்களை விளைவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே பூவாணியில் மாநில தோட்டக்கலை  பண்ணை கடந்த 1967ஆம் ஆண்டு முதல்  செயல்பட்டு வருகிறது. மொத்தம் 9.4ஹெக் டேர் பரப்பளவில் உள்ள இப்பண்ணையில் மா, நாட்டு நெல்லி, புங்கை, புளி, மகிழம், வேம்பு ஆகிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.  இப்பண்ணையில் மா வகைகள், சீனிக் கொய்யா, பப்பாளி, நெல்லி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் பல்  வேறு இரகங்களின் தாய்ச்செடிகள் நடவு  செய்யப்பட்டு அதிலிருந்து பதியம் முறை யிலும், ஒட்டு முறையிலும் கன்றுகள் உற்  பத்தி செய்யப்பட்டு விற்பனையும் செய் யப்பட்டு வருகிறது.
டிராகன் பழம்
தற்போது அதிக அளவில் விற்பனை யாகி வருவது டிராகன் பழம் ஆகும். டிராகன்  பழக் கன்றுகள் இங்கு தற்போது உற்பத்தி செய்யப்பட்டு கன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பண்ணை மேலாளர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதியில் டிராகன் பழங்கள் விளையும். தற்போது, நரிக்குடி, திருச்சுழி மற்றும் சிவகாசி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் டிராகன் பழத் தோட்டங்கள் அமைத்து நல்ல வருமானம் ஈட்டி வரு கின்றனர். குறைந்தபட்சம் கிலோ ரூ.100 வரை இப்பழங்கள் விற்பனைய செய் யப்படுகிறது என்றார்.
ஒரே மரத்தில் 6 வகை மாம்பழங்கள்  
இப்பண்ணையில் ஒரே மரத்தில் 6 வகை யான மாம்பழங்களை விளைய வைத்து,  காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள னர். முக்கனிகளில் முதன்மை இடத்தைப் பிடித்திருப்பது மாங்கனியாகும். அதில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சுவை மிகுந்த இராஜபாளையம் சப் போட்டா, ஹூமாயூன், பங்கனப்பள்ளி, பஞ்ச வர்ணம், மல்லிகா, மற்றும் அல்போன்சா ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரே மரத்தில் 6 வகையான மாம்பழங்களை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.  இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன் கூறுகையில், ஏற்கனவே உள்ள பழைய மாமரங்கள் காய்த்து முதிர்ந்து விடும். அவற்றை அகற்  றும் போது, அதன் கீழ்ப் பகுதியில் இது போன்ற சுவை மிகுந்த 6 வகையான மா  மரங்களை தேர்வு செய்து அதன் கிளை களில் ஒரு பகுதியை எடுத்து, வெட்டப்பட்ட மரத்தின் கீழ்ப்பகுதியில் இணைத்து வளர்க்கும் போது 6 வகையான பழங்கள் ஒரே மரத்தில் கிடைக்கின்றன. வீடுகளில் இதுபோன்று மரங்களை வளர்த்து பயன்பெறலாம். பலர் வீடுகளில் உள்ள மாம்பழங்கள் பெரும்பாலும் ஊறு காய் போடுவதற்கே பயன்படுகிறது. அத்து டன் இதுபோன்று சுவை மிகுந்த மா மரங்களை இணைக்கும் போது பல வகை யான பழங்கள் கிடைத்திடும். இதுபோன்ற மரங்களை வீட்டில் உள்ள தோட்டங்களில் வளர்க்க வேண்டுமெனில் எங்களை அணு கினால் உடனே செய்து தரப்படும் என்றார்.
பாலா செடியில் வளரும் சப்போட்டா 
2 அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள சிறிய செடிகளில் சப்போட்டா பழங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியாரம்மாள் கூறுகை யில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் “பாலா“ எனப்படும் செடிகள் உள்ளன. இவை கடுமையான வறட்சியை யும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. அச்செடியின் நடுவே நன்கு வளர்ந்து காய்கள் தரும் சப்போட்டா செடியின் கிளை யை இணைத்து வளர்த்துள்ளோம். இதில்  வேகமாக சப்போட்டா காய்கள் வளர்கின் றன. இக்கன்றுகளை விவசாயிகள் வாங்கி தோட்டத்தில் வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு கன்று ரூ.60 விலையில் விற்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இப்பண்ணையில்,  தக்காளி,  கத்தரி மற்றும் மிளகாய் ஆகிய காய்கறி  குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய் யப்படுகிறது. இதேபோல், நாட்டு தென்னங் கன்று கள், பப்பாளி, நெல்லி கன்றுகள், தூது வளை, பிரண்டை, துளசி, கற்பூரவள்ளி, நொச்சி, திப்பிலி, செம்பருத்தி, யானை நெறுஞ்சி, சோற்றுக் கற்றாழை, ரனகன்னி போன்ற மூலிகை தாவரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கன்று ஒன்று ரூ.10 விலையில் பூவாணி தோட்டக் கலைத்துறை பண்ணையில் விற்கப்படுகின்றன.