ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஈ பிளாக்கில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் புதிய கிளையையும், ஏடிஎம் மையத்தையும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து வைத்து, 108 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். இதில் வங்கி பொது மேலாளர் சென்னை ஜி.ராஜேஸ்வர ரெட்டி, துணை மண்டல மேலாளர்கள் கேசர்நாத், பிரசன்ன குமார், மகளிர் திட்ட இயக்குநர் மு.நானில தாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், முன்னோடி வங்கியின் மேலாளர் ஆளியம்மா ஆபிரகாம், கிளை மேலாளர் கே.அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.