districts

img

வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி

கொரோனா தொற்றுக்கு பிறகு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றப்பட்டிருந்தன.

தற்போது படிப்படியாக பல்வேறு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651), மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687), திருநெல்வேலி - ஜம்மு ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா விரைவு ரயில் (16787), ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் விரைவு ரயில் (22613), திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (11022), மதுரை - மும்பை லோக்மான்ய திலக் முனையம் விரைவு ரயில் (22102), கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (22630), ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில் (16733), தூத்துக்குடி - ஓகா விவேக் விரைவு ரயில் (19567), திருநெல்வேலி - ஜாம்நகர் விரைவு ரயில் (19577), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (20895), திருநெல்வேலி - பிலாஸ்பூர் விரைவு ரயில் (22620), ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயில் (22535) அகியவற்றில் முறையே ஜூலை 3, 3, 4, 3, ஜூன் 30, ஜூலை 1,  6, 1,  3,  4, 3, 3, 6 ஆகிய நாட்கள் முதல் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகள் பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

மேலும், கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் (12641), நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16340), ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16352) ஆகியவற்றில் முறையே ஜூலை 1, 1, ஜூன் 30 ஆகிய நாட்கள் முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.