சிவகங்கை, மே 21- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கண்டரமாணிக்கத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆல்வின் ஜேம்ஸ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் வசந்த், ஆலோசகர் தாமஸ்ஆரோக்கியம், சுகாதார ஆய்வா ளர் ஜெயகாந்தன், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகேசன், கீழப்பட்ட மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவி பிரமிளா கார்த்திகேயன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டத்தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் தண்டியப்பன், உள்ளிட்டோர் பங் கேற்றனர். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கினர். அவர்களுக்கு பாராட் டுச் சான்று கொடுக்கப்பட்டது.