districts

img

பிஎஸ்என்எல் -ஐ பாதுகாக்கக்கோரி வாலிபர் சங்கம் போராட்டம்

இராமநாதபுரம்,ஜன.21- தனியார் செல்போன் நிறுவ னங்களின் கட்டண கொள்ளை யை தடுத்து நிறுத்தக் கோரி யும், பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல் -ஐ பாது காத்திடக்கோரியும் 4G,5G சேவை யை வழங்கி, மேம்படுத்திட கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி வித் பிஎஸ்என்எல் போராட்டம் இராம நாதபுரம் மாவட்டத்தில் பரமக் குடி  தாலுகாவில் படித்துறை, காமராஜ் நகர்,பகைவென்றி ஆகிய கிளைகளில் நடை பெற்றது இதில் மாவட்டச்செய லாளர் தட்சிணாமூர்த்தி, தாலுக்கா குழு உறுப்பினர் ஜெய பால், கிளைச் செயலாளர் பிரவீன்ராஜ், நவீன் ஆகியோரும் இராமேஸ்வரத்தில் பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா  தலைவர் மணிகண்டன் ,தாலுகா செயலாளர் கார்த்திக் ,மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் அபிராமம் நகரில் கிளை நிர்வாகி பிரபு மற்றும் பலர்  கலந்து கொண்ட னர்.