districts

img

பிஎஸ்என்எல்-ஐ விற்பதற்கு எதிர்ப்பு 4ஜி, 5ஜி சேவைகள் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்

தேனி, ஜன.18- பிஎஸ்என்எல் நிறுவனத்தை மோடி அரசு விற்பதை கண்டித்தும், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி யும் தேனி மாவட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி வித் பிஎஸ்என்எல் என்ற முழக்கத்து டன் நூதன போராட்டம் நடைபெற் றது.  தேனியில் நடைபெற்ற போராட்டத் திற்கு தாலுகா தலைவர் எம்.முத்துக் குமார் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் உரையாற்றினார். வாலிபர் சங்க நிர்வாகி ஜி.ராஜேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் டி.நாகராஜ், மாவட்டச் செயலாளர் வேல் பிரகாஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். கம்பத்தில் நடைபெற்ற போராட் டத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் கே.ஆர்.லெனின், நிர்வாகிகள் மணியரசன், முரளி, ஹாலித், பிரக தீஸ், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போடியில் தாலுகாச் செயலாளர் எம்.செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகி கள் கருப்பையா, கோட்டையன், காளி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியகுளத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தாலுகாச் செயலா ளர் ச.செளந்திரபாண்டியன், தாலுகா நிர்வாகிகள் மதன்குமார், மணிகண் டன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்க ளில் எதிர்ப்பை பதிவுசெய்தனர். சாத்தூர்  சாத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி வித்  பிஎஸ்என்எல் என்ற நூதனப் போராட் டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமையேற் றார். மாவட்ட குழு உறுப்பினர் முத்து கணேசன், நகர பொருளாளர் பி. பெத்துராஜ், நகர் குழு உறுப்பினர் சண்முக முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் திண்டுக்கல்லில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவ்வா யன்று பழனி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு திண்டுக்கல் நகரச்செயலா ளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. ஆர்.பாலாஜி, நகரத்துணைத்தலைவர் ஜெகன், நகர்க்குழு உறுப்பினர்கள் பிரேம், ஜூலியன், தாமு ஆகியோர் பங்கேற்றனர்.