திண்டுக்கல், ஏப்.13- நிலக்கோட்டையில் அரசு சார் பில் வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் செண்ட் தொழிற் சாலை அமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட் டிற்கு மாவட்ட துணை செயலா ளர் சேதுசிவன் தலைமை தாங்கி னார். மாவட்ட குழு உறுப்பினர் பிடல் காஸ்ட்ரோ வரவேற்று பேசி னார். மாவட்ட பொருளாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் சாதிக் அலி வாழ்த்தி பேசினார். மாவட்ட செய லாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவு செய்து பேசினார். மாநாட்டில், புதிய ஒன்றியத் தலைவராக பிடல்காஸ்ட்ரோ, செயலாளராக சேதுசிவன், பொருளாளராக செங்கோடன், துணை தலைவராக சுபாஷ், துணை செயலாளராக தினேஷ் உள்ளிட்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. நிலக்கோட்டையில் அரசு சார்பில் வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் செண்ட் தொழிற் சாலை அமைக்க வேண்டும், பேரூராட்சிக்குள் விளையாட்டு மைதானம் உருவாக்க வேண் டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.