districts

மதுரை முக்கிய செய்திகள்

இந்தித் திணிப்பை எதிர்த்து வாலிபர், மாணவர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, அக்.29-  மாநிலங்களின் மொழி உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சங்கரன்கோவில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் இ.ஆபிரகாம் தலைமை வகித்தார். தமுஎகச கிளைத்தலைவர் தண்டபாணி, மாணவர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.மாடசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் எம்.அருண், மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் முகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு உரிமமின்றி தற்காலிக உணவுக் கடைகள் நடத்தக் கூடாது:ஆட்சியர்

தூத்துக்குடி, அக். 29 திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாக் காலத்தில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தற்காலிக உணவுக் கடை கள் இயங்கினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என ஆட்சியர் கி.செந்தில்ராஜ்  எச்சரிக்கை விடுத்துள்ளார். கந்தசஷ்டி விழாக் காலத்தின் போது திருச்செந்தூ ரில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகரிக்கவும், அன்ன தானங்கள் அதிகளவில் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆனால், அவையாவும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திடவும் வேண்டும் என அறிவுறுத்துவதுடன், சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற தவறினால் கடும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:  கோழி கடைகளில் கிருமிநாசினி தெளிப்பு

திருநெல்வேலி, அக்.29- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன. இதையடுத்து தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்  பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பறவை காய்ச்சல் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.  நெல்லை மாநகர பகுதி, வண்ணார்பேட்டை, கொக்கிர குளம் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் கிருமி  நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள கறிக்கோழி கடைகளிலும் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவ.14, 15-ல் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி, அக் 29- நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்க ளில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்கள்-251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-15 என மொத்தம் உள்ள 266 வாகனங்கள் தாழையூத்து காவல் நிலைய வளாகத்தில் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படவுள்ளன.  இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்புப வர்கள் முன்பணமாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நவம்பர் 12-ஆம் தேதி கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். மேலும் வாகனங்க ளை முன்கூட்டியே வந்து பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ் பி சரவணன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எரிந்த நிலையில் மூதாட்டி உடல் மீட்பு 

திருநெல்வேலி, அக்.29- பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் சிவசுப்பு. இவரது மனைவி அரசம்மாள் (70). இவர்களது மகன் அண்ணா மலை. இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சிவ சுப்பு வயது முதிர்வு காணரமாக இறந்துவிட்டார். இதனால் அரசம்மாள் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார்.  இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அவரது வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு கீழ் பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. உடனே அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் பாளை தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனடியாக அவர்கள் வந்து தீயை அணைத்து விட்டு பார்த்தபோது அதில் மூதாட்டி அரசம்மாள் எரிந்த நிலையில் கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பாளை தாலுகா காவல்துறையினர் உயிரிழந்த மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். '

கடன் பிரச்சனையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி, அக்.29- தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் சுடலைமாரி (46). இவர் வங்கியில் விவசாய கடன் வாங்கியுள்ளார்.  இந்நிலையில், விவசாயத்தில் போதிய விளைச்சல் இல்லாமல் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுடலைமாரி வெள்ளியன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு புகுந்து நகை திருட்டு : ரவுடி உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி, அக்.29- கோவில்பட்டியில் வீடு புகுந்து தகராறு செய்து வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தி தங்க நகைகளை திருடிய ரவுடி உட்பட 2 பேர் கைது செய்யப் பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி அன்னபூர்ணம் (35) என்பவரது சகோதரர் மாரியப்பன் என்பவருக்கும், கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முருகன் (எ) கேண்டின் முருகன் (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று முருகன், இவரது நண்பரான கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த காளி (41) மற்றும் சிலர் சேர்ந்து அன்னபூர்ணத்தின் வீட்டிற்கு சென்று அங்குள்ள டிவி, நாற்காலி, கிரைண்டர், மிக்ஸி, ஏசி, போன்றவற்றை சேதப்படுத்தி வீட்டில் இருந்த 6 சவரன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அன்னபூர்ணம் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர்அரிக்கண்ணன் வழக்குபதிவு செய்து முருகன் (எ) கேண்டின் முருகன் மற்றும் காளி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட முருகன் (எ) கேண்டின் முருகன் மீது காவல் நிலையங்களில் 3 கஞ்சா வழக்குகள் உட்பட 26 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கோவில்  சூரசம்ஹாரம்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை 

தூத்துக்குடி, அக்.29- திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணத்துவ படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிறன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் 3 ஆயிரம் பேர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர். மேலும் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மோப்பநாய் படைப் பிரி வினர் மற்றும் வெடிகுண்டு நிபுணத்துவ படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்திற்கு  மின் இணைப்பு பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி, அக்.29- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் திருப்பணிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில், கிராமத்திற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலை கிராமமான பாபநாசம் கீழ் முகாம் பிரிவிற்குட்பட்ட திருப்பணிபுரம் கிராமத்திற்கு புதிதாக மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் வழங்க மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. மின் கம்பங்களும்,  மின்பாதைகளும்  அமைக்கவேண்டிய இடம் வனத்துறையின் வசம் இருப்பதால், மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  மேலும் அங்குள்ள வீடுகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட பேட்டரிகளுடன் கூடிய சூரிய ஒளி மின்விளக்குகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  இங்கு தாமிரபரணி ஆறு 3 இடங்களில் கிளை ஆறுகளாக பிரிவதால் மொத்தம் 6 இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று 63 கிலோவாட் மின்மாற்றி அமைத்து அங்கு இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார்செய்யப்பட்டுள்ளது.

காவலர்களை தாக்க முயன்றவர்கள் கைது

தூத்துக்குடி, அக்.29- தூத்துக்குடியில் காவல்துறையினரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, அரிவாளால் தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் வெள்ளியன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிவந்தா குளம் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில், தூத்துக்குடி அய்யாசாமி காலனி பகுதியை சேர்ந்த ரத்னஹரிஷ் (21), மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த யோகீஸ்வரன் (21) மற்றும் வண்ணார் தெருவை சேர்ந்த கணேஷ் (20) ஆகிய 3 பேரும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அரிவாளால் தாக்க முயன்றனர். இதனால், ரத்னஹரிஷ், யோகீஸ்வரன் மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டம்

நாகர்கோவில், அக்.29- உள்ளாட்சி தினமான நவம்பர் முதல்நாள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக அறிவித்துள்ளபடி ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறலாம்.

சாலையை கடக்க முயன்றவர் பேருந்து மோதி பலி 

திருவில்லிபுத்தூர்,அக்.29- சாலையை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற வர் பேருந்து மோதி பலியானார். திருவில்லிபுத்தூர் வட்டம் மல்லி  ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவர் வெள்ளிக்கிழமை அன்று இரவு கிராமத்திலி ருந்து இரு சக்கர வாகனத்தில் சிவகாசி செல்லும் சாலை யை கடக்க முயன்றுள்ளார். அப்போது சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த மல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொட்டாங்குச்சியை எரித்து  கரி தயாரிக்க தடை: ஆட்சியர்

திண்டுக்கல், அக்.29 கொட்டாங்குச்சியை எரித்து கரி தயாரிப்பதால் நிலம் நீர் மாசுபடுவதாக விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் மனுவை விசாரித்து கொட்டாங்குச்சியை எரித்து கரி தயாரிப்பதற்கு தடை விதித்தார்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  வெள்ளியன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் விசாகன் பேசும் போது, விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையக்கூடிய விளை பொருட்களை மதிப்புக் கூட்டு பொருட்களாக மாற்றிட தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்று அவைகளை செயல்படுத்த வேண்டும். தற்போது கொடுக்கப்பட்ட மனுக்களை வேளாண் மைத்துறை இணை இயக்குநர்  அலுவலகம் மூலம் அது தொடர்புடைய அலுவலகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 3 விவசாயிகளு க்கு சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்குவ தற்கான உத்தரவையும், 2 விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார்கள் வழங்குவதற்கான உத்தரவையும், வழங்கினார். கொட்டாங்குச்சியை எரித்து கரி தயாரிப்பதால் நிலம், மற்றும் நீர் மாசுபடுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கொடுத்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு கொட்டாங்குச்சியை எரித்து கரி தயாரிப்ப தற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால்  முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது 

தேனி ,அக்.29- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து  சரிந்து வருகிறது . முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது. புதன்கிழமை  818 கன அடியாக இருந்த நீர்வரத்து வியாழ னன்று 673 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை  காலை நீர்வரத்து மேலும் சரிந்து 526 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வைகை அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. 926 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1688 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி யாக உள்ளது. 132 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர்  பாசனத்திற்கு 92 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்126.31 அடி யாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தில்  பயன்பெற விண்ணப்பிக்கலாம் 

தென்காசி, அக்.29-  அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவி களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகையை பெற கல்லூரியில் முதலா மாண்டு பயிலும் மாணவிகள் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைதளம் மூலம்  நவம்பர் 1 முதல் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரி வித்துள்ளார்.  அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும் மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.