districts

img

தியாகி சந்துரு நினைவுதினத்தில் உதிர தானம் செய்த இளைஞர்கள்

விருதுநகர், ஜூலை 16- விருதுநகர் தியாகி பி.ஜே.சந்துருவின் 33  ஆவது நினைவு தினத்தை யொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்த தான கழகம் மற்றும் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்து வமனை இணைந்து உதிர தான முகாம் நடைபெற்றது. பாண்டியன் நகரில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரச்  செயலாளர் ஆர்.தீபக்குமார் தலைமை தாங்கினார். நக ரத் தலைவர் எம்.பொன் பாண்டி, பி.கருப்பசாமி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இரத்ததான கழக கன்  வீனர் எம்.மாரிமுத்து, சமூக  ஆர்வலர் எம்.ஊர்காவலன், சிபிஎம் நகர் செயலாளர் எல். முருகன், ஆலமரம் அமைப் பின் நிர்வாகிகள் புஷ்பராஜ், எட்வர்டு ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். வாலிபர்  சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் சிறப்புரை யாற்றினார். முடிவில் நகர பொருளாளர் குணசுந்தர் நன்றி கூறினார். இதில் நகர்  குழு உறுப்பினர்கள் பி. ஆனந்த், எஸ்.சத்யா, எம். சத்தியஜித், முனீஸ்வரன், அபி, சரத், எஸ்.டி.மணிகண்  டன் உள்ளிட்டோர்  பங்கேற்ற னர்.