நாகர்கோவில், பிப். 23 கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சிக்கு உள்பட்ட 14 வது வார்டில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் இளம் கம்யூனிஸ்ட் பி.கீது. அவர் கூறுகையில், மொத்தம் 541 வாக்குகள் பதிவாகியதில் 115 வாக்கு வித்தியாசத்தில் எதிரணியான பாஜக வை வீழ்த்தியுள்ளோம் .மேலும் 15 வருடங்களுக்கு மேல் பாஜக வின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த மக்கள் ,சாமானிய மக்களின் உண்மை விடியலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் அதில் நான் போட்டியிட்டிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. மேலும் இந்த உள்ளாட்சியில் சாதிய மத பேதம் ஒழித்து மக்கள் ஒன்றிணைந்து பொது எதிரியான பாஜகவை படுதோல்வியை சுவைக்கச் செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி மேலும் மக்களுக்கு விடுக்கும் தனது முக்கிய கோரிக்கையாக அடுத்த முறையும் அனைவரும் கட்டாயமாக அவர்களது ஜனநாயக கடமையான வாக்கினையளிப்பது அவசியம், மேலும் அவர் , அரசியல் பார்வையுடைய இளையோர் விருப்பமிருந்தும் களம் காண பின்வாங்குவதை முதலில் தவிர்க்க வேண்டும் .
மேலும் தேர்தல் களம் புகும் இளைஞர்கள் சாதிய மத வேற்றுமைகளை அரசியலின் போது அறவே தவித்தலே ஒரு உன்னத எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் . இக்கால கட்டத்தில் மட்டுமல்லாமல் ஆரம்பத்திலிருந்தே பலர் நலன் சார் கோரிக்கைகளை முன்வைத்து போர் களத்திலும், தேர்தல் களத்திலும் சோர்வுறாது இன்று வரை நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றது எனக்கு இன்னொரு அங்கீகாரம் பி. காம் பட்டதாரியான கீது கடந்த ஆண்டுகளில் பள்ளிமாணவர்களுக்கு பாட சாலை ஆசிரியராகவும் வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பாட சாலை நடத்தி வந்த பஞ்சாயத்து கட்டிடமானது தற்போது பல இடர்பாடுகளினால் நலிவுற்ற நிலையில் இருப்பது குறித்து கூறியிருந்தேன், இனி அவை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி கூறுகிறேன். மேலும் மாணவர்களின் நல சார்ந்த கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அடுத்ததாக இந்த வார்டுக்குட்பட்ட இந்து அற நிலை ய துறையின் கீழ் செயல்படும் சமூக நலக்கூடத்தில் ஏழை எளியோருக்கான திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பாஜக வின் பிடியில் இருக்கும் இந்து அற நிலைய துறை அதற்கு வித்துள்ள தடை விரைவில் நீக்கப்படும், மேலும் இது போன்ற பிரச்சனைகள் களையப்படும் என்றார். மதவாத சக்திகளின் பிடியில் இருந்த இந்த வார்டில் குடிநீர் உள்ளிட்ட சாமானியர்களின் பல அத்தியாவசிய தேவைகளை பின்னுக்கு தள்ளி தங்கள் சொந்த பயனுக்காக அரசியல் செய்து வந்தனர் பாஜகவினர் .மேலும் அதற்கு ஒரு முற்று புள்ளியிட அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்துக்காக வாக்குகளை சேகரித்து எனக்கு வெற்றியினை சுவைக்கச் செய்தார்கள். அவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எனது சக தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியுடன் கூடிய நேசிப்பை உரித்தாக்கி கொள்கிறேன் என்றார். மேலும் தங்களின் தேவைகளை நாடி எந்நேரமும் என்னை அணுகலாம் என்றும் மேலும் சாதிய மாத பேதமற்று எனக்கு ஆதரவு தெரிவித்தது போன்றே என்னுடைய சேவையும் தொடரும் என உறுதி கூறினார்.