திருவில்லிபுத்தூர், மார்ச் 25 - திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மகளிர் குழுக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட பேரணியை நகர்மன்றத் தலைவர் த.தங்கம் ரவிக் கண்ணன் துவக்கி வைத்தார். மஞ்சள் பையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யும் பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியத்தை விளக்கியும் நகர் நல அலுவலர் மருத்துவர் கவிப்பிரியா பேசினார் . நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, ஆணையாளர் டி. .மல்லிகா வாழ்த்துரை வழங்கினார். பேரணி யில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் சந்திரா, ஜஹாங்கீர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், நகர் வருவாய் ஆய்வாளர் ஆனந்த கிருஷ்ணர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.