districts

உலகத் திருக்குறள்  மைய மாதக் கூட்டம்

மெலட்டூர், ஏப்.10- உலகத் திருக்குறள் மைய 276 வது மாதக் கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கதிர்ச் செல்வன் தலைமை வகித்தார். சங்கர் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் நன்னிலம் அரசுக் கல்லூரி உத விப் பேராசிரியர் அய்யப்பன் திருக்குறளும், தீந்தமிழ் நெறியும் என்றத் தலைப்பில் பேசி னார். இதில், ஜெயராமன், அறிவழகன், குறள் நேசர் நவநீத கிருஷ்ணன், குருசாமி, சந்திரன், கலைச் செல்வன், ரகுபதி, பத்மநாபன், தில்லை நாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.