districts

img

காந்திகிராம பல்கலை.யில் உலக மண்வள தினவிழா

தமிழக முதல்வர்  நாளை  மதுரை வருகை மதுரை, டிச.7- தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் டிசம்பர் 9 அன்று  மதுரை வருகிறார்.  அன்று காலையில் மாநகராட்சி பொன் விழா நுழைவு  வாயில் திறப்பு விழாவிலும் பெருங்குடியில் நடை பெறும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிலும் முதல்வர் பங்கேற்கிறார்.  வியாழக்கிழமை காலை தென்காசியிலிருந்து புறப் பட்டு  இரவு மதுரை வந்தடைகிறார். வெள்ளிக்கிழமை மதுரை விழாக்களில் பங்கேற்ற பின்னர் விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார். சாலையோர பள்ளத்தில் விழுந்து மளிகை கடைக்காரர் பலி வேடசந்தூர், டிச.8-  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர்  ஊராட்சி ராஜபுரத்தில் மளிகை மற்றும் டீக்கடை வைத்துள்ளவர் சுப்பிரமணி(வயது 48). இவர் செவ்வா யன்று இரவு அருகே உள்ள கருதனம்பட்டிக்கு சென்று விட்டு தனது

இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கோவிலூர் -ஆர்.புதுக்கோட்டை சாலையில் ஆர்.பி. பள்ளபட்டி அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் சென்று விழுந்தது. அதை ஓட்டிச்சென்ற சுப்பிரமணியும் உடன் பள்ளத்தில் விழுந்து  இறந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உசிலம்பட்டி அருகே பிறந்து  15 நாட்களே ஆன பெண்சிசு பலி மதுரை, டிச.7- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் - ரெஜினா தம்பதி.  இவர்களுக்கு  ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரெஜினா விற்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தாய் வீடான ஆரியபட்டிக்கு  தாய் மற்றும் சேய் நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் டிசம்பர் 7 அன்று வீட்டில் குழந்தை பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம டைந்தாக கூறப்படுகிறது இதனையடுத்து 108 ஆம்பு லன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த நிலையில் மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தையை பரிசோதித்த மருத்து வர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ள னர். விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறை யினர்  குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய் விற்காக அனுப்பு வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி மூதாட்டி பலி திருவில்லிபுத்தூர், டிச.7-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காந்தி  நகரில் வசிப்பவர் பொன்னையா மனைவி பாண்டி யம்மாள் (வயது 60). இவரது மகள் காளியம்மாள் திருவா ரூர் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.மகளைப்  பார்ப்பதற்காக  பாண்டியம்மாள் திருவாரூருக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பினார். கிருஷ்ணன்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து வரும்போது அவ்வழியே தட்டாங்குளம் பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் (வயது 29) என்பவர் ஓட்டி வந்த கார் பாண்டி யம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார்.

இச்சம்ப வம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காந்திகிராம பல்கலை.யில்  உலக மண்வள தினவிழா  சின்னாளபட்டி, டிச.7- மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் மண்ணின் அரிமானத்தை குறைத்திடவும் மேலும் உணவுப் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண்வள  தினமாக கொண்டாடப்படுகிறது.  மண்ணின் முக்கியத்து வம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்  பட்டு வருகிறது.   இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்திற்குற்பட்ட வேளாண் அறிவியல் மையத்தில்  உலக மண்வள தினவிழா நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிவக்குமார் தலைமையுரையாற்றினார்.  காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் மண்பரிசோதனை ஆய்வகத்தை பயன்படுத்தி விவசாயிகள் மண்மாதிரி பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை பேணிக் காக்க  வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் மட்டும் இலவசமாக மண்பரிசோதனை செய்து தரப்படும் என்றும் தெரி வித்தார். இயற்கை விவசாயி சின்னையா நடேசன்,  முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் , தொழில்நுட்ப வல்லுநர் சரவணன் ஆகியோர் உரையாற்றினர். இயற்கை விவசாயம் சார்ந்த இடுபொருட்கள் கண்காட்சி நடை பெற்றது.  இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.