districts

img

நகர்ப்புற சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மதுரையில் பயிலரங்கம்

மதுரை, மார்ச் 7- நகர்ப்புறச் சாலைகள்  மற்றும் தூய்மை பாரத  இயக் கம் 2.0  திட்டத்தை செயல் படுத்துவது  குறித்து  நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை அரசு  கூடுதல் தலைமைச்செயலா ளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா ஆகியோர்  தலைமையில்  ஒருநாள் பயி லரங்கம் உலகத் தமிழ் சங்க  வளாகத்தில் மார்ச் 7 அன்று  நடைபெற்றது. பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குராலா, மாநகராட்சி ஆணையா ளர்கள் சிம்ரன்ஜீத் சிங்  (மதுரை), சிவகிருஷ்ண மூர்த்தி (திருநெல்வேலி), தினேஷ்குமார் (தூத்துக் குடி), ஆனந்தமோகன் (நாகர்கோவில்), சிவசுப்பிர மணியன் (திண்டுக்கல்), கிருஷ்ண மூர்த்தி (சிவகாசி) ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் தமிழக அரசின் வழி காட்டுதலின்படி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. குறிப்பாக தூய்மை பாரத இயக்கம் 2.0 மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ்  சாலைகளை மேம்படுத்து வது, மழைநீர் வடிகால்கள், கால்வாய் மற்றும் கண்மாய் கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீர்  நிலைகளை மேம்படுத்து தல், குளங்கள், ஊரணி களை தூர்வாருதல் உள் ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து  விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.