districts

விருதுநகர் நகராட்சியில் பணிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு

விருதுநகர், ஆக.31- பொது மக்களுக்கான அடிப்படைப் பணிகள் ஏதும் நடைபெறவில்லையெனக் கூறி நகராட்சிக் கூட்டத்திலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், அதி முக, அமமுக மற்றும் சுயேச்சை உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர். விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் தலை வர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்  றது. ஆணையாளர் லீனாசைமன், பொறி யாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வரு மாறு: காமராஜர் சிலை முதல் காந்தி சிலை வரையுள்ள தார்ச் சாலை மோசமாக உள்  ளது. பள்ளி மாணவி கீழே விழுந்து காயம டைந்து விட்டார். உடனடியாக பழுதான சாலையைச் சீரமைக்க வேண்டும் என உறுப்பினர் முத்துராமன் தெரிவித்தார். பாத்திமாநகர் பிரதான சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, புல்லலக் கோட்டை சாலை, புளுகனூரணி சாலை  ஆகியவை மழையால் சேதமடைந்துள் ளது. அனைத்துச் சாலைகளிலும் மரா மத்துப் பணிகளைச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்த தலைவர், பழு தான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து மூன்று மாதங்களாக உதவிப்  பொறியாளர் மற்றும் அலுவலர்கள் நக ராட்சியில் இல்லை. இதனால், பணிகள் எது வும் நடைபெறவில்லை எனக் கூறி காங்கி ரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதி முக, அமமுக, சுயேச்சை என உறுப்பினர் கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பின்பு, பேசிய தலைவர், அமைச்சரிடம் பேசி உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அலு வலர்களை வரவழைக்க ஏற்பாடு செய் வோம் என்றார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவ னத்தினர் தெருக்களில் ஒழுங்கற்ற முறை யில் தோண்டி கம்பம் நடுகின்றனர். அப்  போது, வயர்களையும் அறுத்து விடு கின்றனர். இதனால், தெருவிளக்குகள் எரிய வில்லையென உறுப்பினர்கள் மணிமாறன், ஹேமா ஆகியோர் குற்றம்சாட்டினர். குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த ஆணை யாளர், நாம் அனுமதி வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில்  பணிகள் செய்து வருகின்றனர். அவர்களை  நேரில் வரவழைத்து எச்சரிப்போம் என் றார். குடிநீர் குழாய்க்காகத் தோண்டிய பள்ளங்களையும் மூடவில்லை. பணிகளும்  நடைபெறவில்லையென உறுப்பினர் ஆறு முகம் புகார் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த தலைவர், குடிநீர்  வடிகால்வாரியம் சரிவரப் பணிகளைச் செய்யவில்லை. மூன்று முறை புகார் கடிதம்  எழுதிவிட்டேன். தொடர்ந்து இதுபோல் செய்கின்றனர் என்றார். கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள  மின் மோட்டார்களை தொடர்ந்து இயக்க  மறுக்கின்றனர். இதனால், குடிநீருடன் கழிவு  நீர் சேர்ந்து வருகிறது என உறுப்பினர்கள் ஜெயக்குமார், சுல்தான் அலாவுதீன் ஆகி யோர் புகார் தெரிவித்தனர்.  ஆறாவது வார்டு பகுதியில் பாதாளச் சாக்கடை த்தொட்டி நிரம்பி சாலையில் செல்கிறது. அதைச் சீரமைக்க பொது நிதியை ஒதுக்காமல், ஏழாவது வார்டில் கழிவறைக்குச் சுற்றுச் சுவர் கட்ட மட்டும்  நிதி எப்படி ஒதுக்கப்படுகிறது என உறுப்பி னர் ராமச்சந்திரன் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த தலைவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் செய்  யப்படும் என உறுதியளித்தார். சாத்தூர் சாலையில் கனரக வாகனங்  கள் நிறுத்துமடம் கட்ட பாதித் தொகை கட னாகவும், மீதி மானியமாகவும் வருவது  குறித்த தீர்மானத்தில் பேசிய பெரும் பாலான உறுப்பினர்கள், ஏற்கனவே, நிதி  நிலை மோசமாக உள்ளது. எனவே, நிதியை  முழு மானியத்தில் கேட்டுப் பெற வேண்டு மெனத் தெரிவித்தனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.