districts

img

கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையப் பணி விரைவில் தொடங்கும்: சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை நவ 3- . மதுரை மாவட்டம்  கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன். இலவச வீட்டு மனை பட்டா 187 பயனாளிக ளுக்கும், இந்திரா காந்தி தேசிய தேசிய முதியோர் உதவித் தொகை இருவரு க்கு, ஆதரவற்ற விதவை  உதவித் தொகை ஐந்து பேரு க்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆறு பேருக்கு கூட்டுறவுத் துறை  மூலம் கால்நடை பராம ரிப்புக் கடன், தோட்டக் கலை துறை சார்பில் பவர் டில்லர் இயந்திரம், வேளாண் துறை சார்பில் சுழற்கலப்பை, பேட்டரி தெளிப்பான், மாப் பிள்ளை சம்பா நெல் விதை தொகுப்பு என மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சத்து 34 ஆயிரம்  மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  தொடர்ந்து அவர் பேசிய தாவது:- தமிழகத்தில் வேறு எந்த ஊராட்சி ஒன்றியத்திற் கும் செய்யாத ஒன்றை தமிழக முதல்வர் கொட்டாம் பட்டி ஒன்றியத்திற்கு செய்து கொடுத்துள்ளார். ரூ.5 கோடி மதிப்பில் கொட்டாம் பட்டி பேருந்து நிலையம் அமைய உள்ளது. அதற் கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். அதை மக்கள் திருவிழா வாகக் கொண்டாட வேண்டு மென்றார். கொட்டம்பட்டி புதிய  பேருந்து நிலைய கட்டுமா னப்பணிக்கான டெண்டர் நவ.17-ஆம் தேதி நடைபெற வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர், சமூக பாது காப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் ஆர்.சௌந்தர்யா, கொட்டாம்பட்டி வளர்ச்சி அலுவலர் ஆர்.செல்ல பாண்டியன், வேளாண் உதவி இயக்குநர் ஜி.சுபா சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் இ. ரிஜிவனா பர்வின், தமிழ்நாடு மின் வாரியம் மேலூர் உதவிச் செயற்பொறியாளர் டி.சந்தி ரன், கொட்டாம்பட்டி உதவி மின் பொறியாளர் ஆ.பால முருகன், கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.என்.எஸ் பாலசுப்ரமணி யன்,  மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தாலுகாகுழு  உறுப்பினர் எஸ்.பி.மணவா ளன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.