மதுரை, ஜூன் 19- மதுரை வைகை ஆற்றின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் அனைத்துப் பேருந்து களும், சிம்மக்கல்லில் இருந்து மதுரை ரயில்வே நிலையத் திற்கு வருபவர்கள் மேல மாரட் வீதியில் தான் இறங்க வேண்டும். பேருந்து நிறுத் தத்தில் தங்குமிடமோ அல் லது பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல் பலகையோ இல்லை. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கொளுத்தும் வெயிலில் நிற் கின்றனர் சிம்மக்கல்லில் இருந்து வரும் அனைத்து வாகனங்க ளும் மேல மாரட் வீதி வழி யாகச் செல்லும் வகையில் மதுரை மாநகர் போக்கு வரத்துக் காவல்துறையினர் மேற்கு வெளி வீதியில் போக்குவரத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு மாற்றி னர். ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மேற்கு வெளி வீதியில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டது. அதே நேரத்தில் ஏற்க னவே உள்ள ஒரு பேருந்து நிழற்குடையை புதிய இடத்திற்கு மாற்றும் வாக்கு றுதி நிறைவேற்றப்பட வில்லை. இதற்கு மாநக ராட்சி அதிகாரிகளே கார ணம் என போக்குவரத்து காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். ரயில் நிலையம் செல்வ தற்கேற்ப டவுன்ஹால் ரோடு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற் றதாக மாற்றவில்லை. ஏறக் குறைய சாலையின் பாதிப் ப குதியில் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடை யூறாக நிறுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதி சாலை இரு வழி போக்குவரத்திற்காக பயன்படுகிறது. மேல மாரட் வீதியில் டாக்சிகள் முதல் சரக்கு வாக னங்கள் வரை நிறுத்தப்படு வது இன்றும் தொடர்கிறது, குறிப்பாக பிற்பகல் நேரங் களில், போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. “போக்கு வரத்து நெரிசல் மேல வெளி வீதியிலிருந்து மேற்கு மாரட் வீதிக்கு மாறிவிட்டது” அவ் வளவு தான் என்கிறார் உண வக ஊழியர் ஒருவர்.