தூத்துக்குடி, ஜூலை 13- தூத்துக்குடி அருகே உள்ள முத் தையாபுரம் வடக்கு தெருவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண் டருக்கு மாலை அணிவித்து, காலி சிலிண்டர் வைத்து கரண்டியால் தட்டி நூதன முறையில் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதற்கு தூத்துக்குடி புறநகர் செயலாளர் கண்ணகி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்டக்குழு உறுப்பி னர் பா.சரஸ்வதி, நிர்வாகி பாணர்வதி, ஞானமணி, பிரம்மசத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குழித்துறை
ஒன்றிய அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் எரிவாயு உருளைக்கு மாலையிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்த்தாண்டத்தில் செவ்வா யன்று (ஜுலை 12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில இணை செயலாளர் உஷா பாசி, குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.எம்.வி.டெல்பின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் ஆகியோர் பேசினர். அல்லி லதா, டயானா, பேபி, சுஜா, விஜயா, லலிதா மற்றும் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.