மதுரை, மார்ச் 14- மேலூர் அருகே சாணிப் பட்டியில் மதுபானக் கடை யை மூடக்கோரி இரண்டா வது நாளாக செவ்வாய்க்கிழ மையன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாணிப்பட்டி யில் நத்தம் செல்லும் பிர தான சாலையில் அரசு மது பான கடை செயல்பட்டு வரு கின்றது. இதனால், 5 கிராமங் களை சேர்ந்த பெண்கள் இவ் வழியே செல்லும் போது, மது குடிப்பவர்கள் அச்சுறுத்தும் வகையிலும், அநாகரிகமாக வும் நடந்துகொள்கின்றனர். இந்த மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர் வாகம் மற்றும் அதிகாரி களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். இந்த மதுபான கடையை அகற்றக்கோரி திங்களன்று காலை 5 கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாணிப்பட்டியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேலவளவு காவல்துறை யினர் மற்றும் டாஸ்மாக் மதுரை மண்டல துணை வட்டாட்சி யர் ஆகியோர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு வார காலத்திற் குள் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு விட்டு பெண்கள் கலைந்து சென்றனர். ஆனால் திங்களன்று மாலையே மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த 500க்கும் மேற்பட்ட பெண் கள் செவ்வாயன்று இரண் டாவது நாளாக சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பல பெண்கள் கைக் குழந்தைகளுடன் மறியலில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகள் வந்து மது பானக்கடை அகற்றப்படும் என உறுதி அளித்தால் மட் டுமே போராட்டத்தை கை விடுவோம் என்று காவல் துறையினரிடம் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் மேலூர் காவல் துறை துணை கண்காணிப் பாளர் ஆர்லியன் ரெபோனி தலைமையில், காவல்துறை யினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி, இன்று மாலை மேலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில், வட்டாட்சியர் தலைமை யில் மதுபான கடையை அகற்ற அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித் தார். இதன்பின்னரே மறி யலை கைவிட்டனர்.