சிவகங்கை, செப்.11- சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் 43 மகளிர் குழுக்களின் தலைவர்கள் கூட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் கூட்டுறவு வங்கி யின் செயலர் ராமசாமி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து பேசும்போது, ‘‘காஞ்சிரங்காலில் ஊராட்சியில் உள்ள 70 விவசாயிகள் கால் நடைத்துறை பரமாரிப்புக்கு வழங்கிய விவசாயக் கடனை உரிய காலத்தில் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி செலுத்தி கூட்டுறவு அமைப்பை பலப்படுத்தி உள்ளனர். தற்போது 43 மகளிர் குழுக்கள் கடன் பெற உள்ள னர். கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தி கூட்டுறவு அமைபை பலப்படுத்தி வளர்ப்பதில் மிகுந்த அக்கறையோடு உள்ளனர்’’ என்றார். காஞ்சிரங்கால் தொடக்க கூட்டுறவு வங்கி செயலர் ராமசாமி, மாற்றுத் திறனாளி சங்க மாநிலத் தலைவர் மலர் மன்னன் ஆகியோர் பேசினர்.