இராமநாதபுரம், மார்ச் 18- இராமநாதபுரத்தில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. மல்லிகா தலைமை வகித்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராமலட்சுமி, விவசாயத்தொழி லாளர் சங்கத்தின் ஆண்டாள், வாலிபர் சங்கத்தின் வில்லியம் ஜாய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செய லாளர் இ. கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.உமா ஆகியோர் பேசினர். ஜனநாயக மாதர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் உஷா பாசி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தின் சார்பாக குருவம்மாள், சாந்தி மற்றும் அரசு உப்பு நிறுவனத்தின் எஸ். செல்வி, உள் ளாட்சித் துறை சார்பாக எஸ்.சாந்திப்பிரியா, தையல் சங்கம் எஸ்.விஜயலட்சுமி உட்பட 250 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆரைகுடி பாரதி கணேசன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.