districts

img

மகளிர் தின கருத்தரங்கம்

திண்டுக்கல். மார்ச் 22- திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, இந்திய மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம்,விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஞாயிறன்று சர்வதேச பெண்கள் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பாப்பாத்தி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பேரா. எஸ்.மோகனா முன்னிலை வகித்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எஸ்.ராணி வரவேற்றார். மாதர் சங்க  மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர். கிருஷ்ணவேணி, மாதர் சங்க மாநில செயலாளர் ஜி.ராணி, மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.