districts

மதுரை முக்கிய செய்திகள்

வள்ளியூர் அருகே ரூ.122-க்கு ரூ.91 ஆயிரம் மின்கட்டணம்  அதிர்ச்சியில் உறைந்த பெண்

திருநெல்வேலி, நவ. 2- நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து (வயது40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு  குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்றும், இதற்கு வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது, வழக்கமாக எனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்ட ணம் வரும். வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். 2 நாட்களில் உண்மை யான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரி கள் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி  வைத்தனர். செவ்வாய்க்கிழமை மின்வாரியம் சார்பில் முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்ட ணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார்.

நவ.6 நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு   

திருநெல்வேலி ,நவ. 2- நெல்லை மாவட்ட ஆட்சியர்  விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்க ளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர். பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப் பள்ளி, சாப்டர் பள்ளி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ‘ தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வின் நடவடிக்கை களை பதிவு செய்ய 15 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வ தற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வலைக்குள் சிக்கிய கடல் பாம்பு கடித்து மீனவர் பரிதாப சாவு

தூத்துக்குடி, நவ.2 பெரியதாழையில் வலைக்குள் சிக்கிய கடல் பாம்பு கடித்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :  தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை சேவியர் கால னியை சேர்ந்தவர் ராஜா (56) மீனவரான இவர் கடந்த 31ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு, மாலையில் கடற்கரையில் மீன் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது வலைக்குள் இருந்த கடல் பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது. இதில் உடலில் விஷம் ஏறி மயக்கமடைந்த அவரை சக மீனவர்கள் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பவுல் லோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை : ஒருவர் கைது

தூத்துக்குடி, நவ.2 நாசரேத் பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேருந்து நிலையம் அருகே, காவல் துணை ஆய்வாளர் சியோன் ராஜா தலை மையிலான காவல்துறையினர் செவ்வாயன்று ரோந்து  பணியில் ஈடுபட்டபோது, செல்போனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த மந்திரம் மகன் கோவிந்தன் (52) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த 5 வெளி மாநில ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடுபுகுந்து நகை திருட்டு:  வாலிபர் கைது

தூத்துக்குடி, நவ.2 முறப்பநாடு அருகே வீடுபுகுந்து 5 பவுன் நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்த னர்.தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40) என்பவரது வீட்டில் கடந்த 24.09.2022 அன்று 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது. இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அமுதாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கித்துரை (26) என்பவர் வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ், இசக்கி துரையை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.ஒரு லட்சத்து 50ஆயிரம் மதிப்பிலான 5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தார்.

பைக் மீது வேன் மோதல்: விபத்தில்  ஒருவர் பலி     

தூத்துக்குடி, நவ.2 எட்டையபுரம் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், எட்டய புரம் அருகே உள்ள வடக்கு செமபுதூர் கிராமம் முதலியார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருப்பசாமி (29). இவரும் அதே பகுதியை சேர்ந்த பொன் முருகன் (43) என்பவரும் எட்டையா புரத்தில் இருந்து வடக்கு செமபுதூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சக்கிலிபட்டி கிராமம் அருகே செல்லும்போது எதிரே வந்த ஒரு வேன் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து இருவ ரும் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் கருப்பசாமி இறந்தார். பொன் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து வேனை ஒட்டி வந்த கசவன்குன்று கிராமத்தை சேர்ந்த சேதுப்பிள்ளை மகன் சுப்பிரமணியன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டிராவல்ஸ் உரிமையாளரை அரிவாளால்  வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை

தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி, நவ.2 டிராவல்ஸ் உரிமையாளரை அரிவா ளால் வெட்டிய ஒர்க்‌ஷாப்காரருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை. இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வரு கிறார். இவர் தனது வேனை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 4 சக்கர வாகன ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் சிவத்தையாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற விஜய்பாஸ்கரன் மகன் ஆதித்தன் (44) என்பவரிடம் பழுது பார்ப்பதற்காக விட்டு இருந்தாராம். கடந்த 24.3.2013 அன்று காலையில் லிங்கதுரை தனது வேனை பார்க்க சென்ற போது, அதில் இருந்த பொருட்கள் காணா மல் போய் இருந்தது. இது குறித்து கேட்ட போது, லிங்கதுரைக்கும், ஆதித்தனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாலையில் லிங்க துரை தனது மகளுடன் கோவிலுக்கு செல்வ தற்காக தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆதித்தன், அவரது நண்பர் கண்ணன் (42) ஆகிய 2 பேரும் சேர்ந்து லிங்கதுரையிடம் தகராறு செய்தனர். பின்னர் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் லிங்க துரையை வெட்டி உள்ளனர். அப்போது அருகில் நின்ற அவரது மகள் சுபாலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஆதித்தன், கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பிஸ்மிதா, குற்றம் சாட்டப்பட்ட ஆதித்தனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்புக் கூறினார். கண்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  வடமாநில வாலிபர் பலி

தூத்துக்குடி, நவ.2 தூத்துக்குடி அருகே தனியார் ஆலையில், தண் ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநி லத்தைச் சேர்ந்தவர் பாரதி மகன் அஜியோ சௌத்தரி (26). இவர் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே சிறுபாடு கிராமத் தில் உள்ள ஐஸ் பிளான்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். செவ்வாயன்று கம்பெனி யில் உள்ள தண்ணீர் தொ ட்டியை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டி ருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறிவிழுந்த அவர் நீரில்  மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வின்ன்சென்ட் அன்பரசி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக் குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையுடன் பைக்கில் சென்றபோது தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி

தூத்துக்குடி, நவ.2 தூத்துக்குடியில் தந்தையுடன் மோட்டார் பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்தான். தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் அஜய் (12) அப்பகு தியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். புதனன்று காலை பள்ளி செல்வதற்காக அஜயை மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். தாள முத்து நகர் அருகே ராஜ பாளையம் பகுதியில் சென்ற போது பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள் ளானது. இதில் தவறி கீழே விழுந்த அஜய் மீது லாரி ஏறி இறங்கி யது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை தூத்துக் குடி அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி ஒட்டுநரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். தண்ணீர் லாரி மோதி மாணவன் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கல்லூரி மாணவர் தற்கொலை

கடமலைக்குண்டு, நவ.2- தேனி மாவட்டம், கண்ட மனூர் அருகே அம்பா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ப வரின் மகன் நித்திஷ் குமார் (வயது 18). இவர் ஆண்டிபட்டி அருகே தனி யார் பொறியியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நித்திஷ்குமார் தேனி பகுதியைச்சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நித்திஷ் குமார் வீட்டில் யாரும் இல் லாத போது தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.