districts

img

கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலம் நீர் தெளிக்கப்படுமா?

திண்டுக்கல், மார்ச் 16- கொடைக்கானலில் தொடர்ந்து 11 நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரி கிறது. இதனால் அதிகாரிகள் தீணை அணைக்க முடியாமல் திணறி வரு கிறார்கள்.  கொடைக்கானல் வனப்பகுதியில் தீ தொடர்ந்து பரவி வருகிறது. ஆனால் அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தி ருப்பதாக கூறுகிறார்கள். வெள்ளகவி, செண்பகனூர், சிட்டிவியூ போன்ற இடங்களில் பற்றிய தீ கீழ் மலை பகுதி  முழுவதும் பரவுவதாக கூறப்படுகிறது. அடுக்கம், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதி மக்களும் கூட இந்த தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  கொடைக்கானல் கொடைகானல் சிட்டி வியூ பகுதியில் பல நூறு ஏக்கர்  நிலங்களில் தீ பற்றி எரிகிறது. செண்பக னூர், அய்யர் கிணறு, தனியார் தோட்  டங்களிலும், வருவாய் நிலங்களிலும் காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது. நூற்றுக்கணக்கான  பச்சை மரங்கள் எரிந்து உடைந்து விழுகின்றன. அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள வன விலங்குகள் அய்யர் கிணறு குடியிருப்பு பகுதியில்  தஞ்சமடைந்துள்ளன.

இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். வெளியே வர அச்ச மடைந்துள்ளனர். செண்பகனூர், வட்டக்கானல், டால்பின்நோஸ், திரு வள்ளுவர் நகர்  பகுதியில் பெரும் புகை  மண்டலமாக உள்ளது. வெயிலின் தாக்  கம் அதிகமாக உள்ளதால் காட்டுத்தீ மேலும் மேலும் பரவுகிறது. இந்த வறட்சி யிலும் கோடை மழை வராதா காட்டுத்  தீயை அணைக்காதா? என்று அதிகாரி கள் ஏக்க பெருமூச்சுவிடுகின்றன.  மேலும் டால்பின் நோஸ் பகுதி அருகேயுள்ள திருவள்ளுவர் நகரிலும் காட்டுத் தீ பரவியதையடுத்து சுற்றுலா பயணினகள் டால்பின் நோஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கவுஞ்சி பெரும்பள்ளம் அருகே பல  நூறு ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் எரிந்துள்ளன. வனத்துறையினர் வனத்  துக்குள் செல்ல முடியாமல் கட்டுப் படுத்த தீ தடுப்பு கோடுகளை அமைக்  கும் பணியில் தீவிரம் காட்டி வரு கின்றனர். ஹெலிக்காப்டர் மூலம்  தண்ணீர் கொண்டு வந்து தீயை அணை க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 48 இடங்களில் தீப்பற்றி எரிவ தாக அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்  லப்படுகிறது. மேலும் காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் உள்ளதாக தெரி விக்கின்றனர். ஆனால் தீ கட்டுக்குள் இல்லை. நாளுக்கு நாள் அணைக்க முடியாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகள் திணறி வருகிறார்கள், இதற்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.