districts

img

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்ட பேருந்து நிலைய கழிவறை திறக்கப்படுமா?

திருவில்லிபுத்தூர், ஆக.23-  திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள பேருந்து நிலையத் திற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான  மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில், பேருந்து நிலையத்தில்  செயல்பட்டு வந்த கட்டண கழிப்பறைக்கான  டெண்டர் கடந்த மார்ச் மாதத்தோடு முடிந்த தால், நகர நிர்வாகத்தின் நேரடி பொறுப்பில்  செயல்பட்டு வந்தது. ஏற்கனவே டெண்டர் எடுத்தவர் மீண்டும் டெண்டர் எடுத்ததால் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பரா மரிப்பு பணிக்காக கழிவறை மூடப்பட்டது.  ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலா கியும் பராமரிப்பு பணிகள் இன்னும் முடிய வில்லை. மேலும் கட்டண கழிப்பறை அருகி லேயே பெயரளவிற்கான இலவச கழிப்  பறை ஒன்று உள்ளது. இதனால் தினந் தோறும் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும்  வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து சிபிஎம் நகரச் செயலாளர்  ஜெயக்குமார் கூறுகையில், ‘‘பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட கட்டணக் கழிப்பறை இரண்டு மாதங்களுக்கு மேலா கியும் திறக்கப்படவில்லை. பராமரிப்பு பணி கள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. உடனடியாக கழிப்பறையை திறப்பதற்கு நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி பெரிய அளவிற்கு போராட்டம் நடத்த  வேண்டிய நிலைமை ஏற்படும்’’ என்று கூறினார்.  இதுகுறித்து நகராட்சி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, கழிப்பறை யை பராமரிப்பதற்காக முறையாக டெண்  டர் விடப்படவில்லை என்பது தெரிய வந்  துள்ளது.  எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தலையிட்டு பேருந்து நிலைய கழிப்பறை யை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.