மேட்டுப்பாளையம், அக்.6- வனம் சார்ந்த சாலைகளில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் காட்டுயிர்கள் பாது காக்கும் வகையில், மாணவ, மாணவிகளும் வனஉயிரின ஆர்வலர்களும் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியபடி சாலையோரம் வரி சையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்திலிருந்து குன்னூர் வழியே உதகை செல்லும் நெடுஞ்சாலையும், கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலையும் அடர்ந்த மலைக் காட்டை ஊடுருவி செல்கின்றன. இருபுறமும் வனங்கள் கொண்ட இச்சாலைகளில் யானை, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வழக் கம். அதே நேரத்தில் இவ்வழியே நீலகிரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் இவற்றின் மீது மோதி உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த படி உள்ளது. இந்நிலையில், இதனை தடுக்கும் வகை யில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை ஒத்துழைப் போடு வன உயிர் மற்றும் இயற்கை பாது காப்பு அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி வியாழனன்று மலையடிவார பகுதி யான கல்லார் என்னுமிடத்தில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலை மையில் வனத்துறையினர், மாணவ, மாணவி கள், வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் இயற்கை நல ஆர்வலர்கள் 500க்கும் மேற் பட்டோர் கைகளில் விழிப்புணர்வு பதாதை களை ஏந்தியபடி சாலையின் இருபுறமும் மனித சங்கிலி போன்று வரிசையாக நின்று, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.