மதுரை, ஜூலை 18- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதங்குடி, மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் இதுதான். இங்கு பல்வேறு சமூ கத்தினர் வசித்து வருகின்றனர். பட்டி யல் சமூகங்களைச் சேர்ந்த 80 குடும்பங் கள் வசிக்கின்றன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் அறிந்து நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை நிரூபிக்கிறது மருதங்குடி. நாயக்குளம் கண்மாய் அருகில் உள்ள ஒரு ஆலமரத்தைக் காட்டி இது தான் பட்டியலின மக்களுக்கான மயா னம் என்கின்றனர். இந்த ஆலமரத்தை ஒட்டி ஒரு சிறு கால்வாய் செல்கிறது. இதன் அருகில் ஒரு மயானம் உள்ளது. இதைச் சுற்றிலும் கருவேல மரங்கள் உள்ளன. இது குறித்து பலமுறை மருதங்குடி பட்டியலின மக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அதிகாரிகள், உங்களுக்கு மயானக் கூட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் அங்கு எந்தக் கூடமும் இல்லை. ஒரு சிறிய தண்ணீர் தொட்டி மட்டுமே உள்ளது. மழை பெய்தால் இறந்தவரின் உடலை எரியூட்டமுடியாது. பாதி எரிந்தும் எரி யாத உடல்களை மறுநாள் எரியூட்டிய சம்பவங்களும் இங்கு நிகழ்ந்துள்ளது. இதற்கு ஒரு விடிவு பிறக்குமா?