தேனி, ஜன.17- தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை சாலையில் மூன்று மணி நேரத்திற் கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் நெரிசலில் சிக்கி தாமதமாகச் சென்றது. நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது . கடந்த நான்கு நாட்களாக பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர் களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய வர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் திங்க ளன்று வேலை பார்க்கும் இடங்களுக்கு திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டத்திலி ருந்து மதுரை மார்க்கமாக செல்வோர், ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடமான சென்னை, கோயம்புத்தூர், திருப் பூர், மதுரை போன்ற பகுதிகளுக்கு திரும்பி சென்றனர். பேருந்துகளிலும், கார் உள் ளிட்ட வாகனங்களில் சென்றனர். ஞாயி றன்று முழு ஊரடங்கு என்பதால் திங்க ளன்று குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டது. இதன் காரணமாக ஆண்டி பட்டி நகரில் வெளியூர் திரும்பும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட் டத்தினால் ஆண்டிபட்டி நகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்றது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியை கடந்து செல்ல ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆனது. வாக னங்கள் ஊர்ந்து செல்லும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியமால் காவல்துறையினர் தவித்தனர். ஆண்டிபட்டி நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண கிடப்பில் போடப்பட்டுள்ள புற வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.