திருநெல்வேலி, ஜன. 1- துருக்கியில் நடைபெற்ற ஆசிய வலு தூக்கும் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்குபெற்ற திருநெல்வேலி மாவட்டம் ராஜா குடியிருப்பை சார்ந்த ராகுல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் . இது போல 26.12.21 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த ஜூடோ கிராப்பிளிங் போட்டியில் பேய் குளம் ஊரை சேர்ந்த முகில் மாறன் தங்க பதக்கத்தை வென் றுள்ளார். தங்க பதக்கம் வென்றுள்ள வர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இஸ்தான்புல்லில் இருந்து சனிக்கிழமை காலை தங்கப்பதக்கம் வென்ற ராகுல் தனது சொந்த ஊரான பாளையங் கோட்டை ராஜா குடியிருப்புக்கு வருகை தந்தார், அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, ராகு லின் தாய், தந்தை ,அவர்களது மகன் ராகுலை வெகுவாக பாராட்டினர்.