districts

img

ஆண்டிபட்டியில் நெசவாளர்கள் வேலைநிறுத்தம்

தேனி, ஜன.2- தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயி ரத்திற்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக இந்தத் தொழி லைச் செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் 2500-க்  கும் மேற்பட்ட விசைத்தறி கள் செயல்பட்டு வருகிறது. இங்குக் காட்டன் சேலை கள், வெள்ளை, கலர் வேஷ்டி கள், கோவில் சீசன்களுக்குக்  கருப்பு, காவி வேஷ்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறிக் கூடங்களி லும், ஒப்பந்த அடிப்படை யில் வீட்டிலும் தறிகள் அமைக்  கப்பட்டு நெசவு செய்து வரு கின்றனர். நெசவாளர்  களுக்கு இரண்டாண்டு களுக்கு ஒருமுறை கூலி  உயர்வு ஒப்பந்தம் போடப் படுவது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் 2022 டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் புதிய  கூலி உயர்வு ஒப்பந்தம் கேட்டு நெசவாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் விசைத்தறி உரிமையா ளர்களிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்த னர். இந்த நிலையில் நெசவா ளர்களுக்கு 50 சதவீத கூலி  உயர்வு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், ஆஜர்  பதிவேடு முறை கொண்டு வரவேண்டும், விசைத்தறிக் கூடங்களில் குடிநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.