தென்மாவட்ட சாதிய மோதல்கள் நடந்த காலங்களில் நூற்றுக்கணக் கான பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நாங்கள் சென்றதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அவ்வாறு செல்வது எங்களுக்கு சுலபமான பணியாக இருக்கவில்லை. ஒவ் வொரு கிராமத்திற்கும் பல தடைகளைத் தாண்டியே நாங்கள் செல்லவேண்டியிருந் தது. எல்லா கிராமங்களிலும் கிராமத்திற்கு வெளியே காவல்துறையினர் குவியலாகக் கூடியிருந்தனர் என்பது பொதுவான அனுபவ மாகும். அவர்கள் எங்களை கிராமத்திற்குள் செல்ல அனுமதிப்பதில்லை. காவல்துறையினருடன் நாங்கள் கடும் வாக்குவாதங்களைச் செய்ய வேண்டியிருந் தது. நாங்கள் பதட்டத்தை உருவாக்கவோ அல்லது உருவாகியிருந்த பதட்டத்தை அதி கரிக்கவோ வரவில்லை என்றும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்து நம்பிக்கையூட்டவே வந்திருப்பதாகவும், கூடவே கொண்டுவந்துள்ள நிவாரணப் பொருட்களை அவர்களுக்கு வழங்க வேண்டு மென்றும் கூறினோம். நாங்கள் அம்மக்களைச் சந்திப்பது அமைதியை பலப்படுத்தவே உதவும் என்றும் வாதாடினோம். பணியிலிருந்த சாதாரண காவலர்கள் நாங்கள் கூறும் எதையும் காதில்போட்டுக் கொள்வதில்லை. எங்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். உடனடியாக நாங்கள் அங்கு ஒரு இடத்தில் முகாமிட்டிருக்கும் உயர் அதிகாரிகளைச் சந் தித்து விபரங்களை எடுத்துக் கூறுவோம். அவர் களும் எங்களை அனுமதி மறுப்பதிலேயே குறியாக இருப்பார்கள். நாங்கள் விடாப்பிடி யாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நோக்கத்தை விளக்கமாக திரும்பத் திரும்ப எடுத்துக் கூறுவோம். அவர்களும் திரும்பத் திரும்ப மறுத்தாலும் எங்களது பிடிவாதமான வாதங்களைக் கேட்ட பிறகு அதில் உள்ள நியாயங்களை மறுக்க முடியாமல் இறுதியாக பெரும்பாலும் அனுமதித்து விடுவார்கள். ஒரு சில கிராமங்களில் நாங்கள் அனுமதி மறுக்கப் பட்டு திரும்பிச் சென்ற அனுபவமும் உண்டு.
அடுத்து நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்வோம். அவை பெரும்பாலும் தலித் குடியிருப்புகள் அல்லது குடிசைப் பகுதியாக இருக்கும். அங்கு ஊருக்கு வெளியே கருப்புக் கொடிகள் நடப் பட்டிருக்கும். அந்த கருப்புக்கொடிகளின் அர்த்தம் அந்த குடியிருப்பு பகுதிக்குள் தலித் அல்லாத வெளியாட்கள் யாரும் செல்ல அனு மதியில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல, அந்த கருப்புக் கொடியின் அருகே பல தலித் இளைஞர்கள் கூடியிருப் பார்கள். அவர்கள் எங்களை வழிமறிப் பார்கள். நாங்கள் அவர்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் இடதுசாரி வர்க்க, வெகுஜன அமைப்புகள் சார்பாக வந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க விரும்பு வதாகவும் கூறி நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்திருப்பதையும் தெரிவிப்போம். இருப்பினும், அவர்கள் எங்களை உள்ளே அனுமதிப்பதற்கு எதிரான மனநிலையிலேயே வாதாடுவார்கள். நாங்கள் அந்த இளைஞர்களிடம் நீங்கள் நினைப்பதைப் போல நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உதவவே வந்துள்ளோம் என தெரிவித்து நாலுமூலைக்கிணறு, கொடியன்குளம் கிரா மங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உள்ள தொடர்பையும் அவர்களுக்காக நீதி மன்றத்தில் வழக்காடுவதையும் குறிப்பிடு வோம். இப்போது அந்த இளைஞர்களுக்குள் பரஸ்பரம் வாக்குவாதம் துவங்கி விடும். ஒரு பகுதி இளைஞர்கள் இவர்கள் நம் மக்களுக்கு ஏற்கனவே உதவியவர்கள் - மேலும் உதவக் கூடியவர்கள், இவர்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் என வாதாடுவார்கள். இன்னொரு பகுதியினர் அதில் தயக்கம் காட்டு வார்கள்.
இந்த வாதத்தின் இறுதியாக எங்களை ஊருக்குள் செல்ல அனுமதித்து விடுவார்கள். ஊருக்குள் நுழைந்ததும் முதலில் ஊர் பெரியவர்களைச் சந்திக்க வேண்டும் (ஊர் தலைவர்கள்) அவர்களில் தலித் அமைப்புகளின் தலைவர்கள் சிலரும் இருப்பார்கள். அவர்களிடம் நாங்கள் வருகை தந்ததன் நோக்கத்தை தெரிவிப்போம். அப்போது அவர்களில் சிலர் “எங்கள் பிரச் சனைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம், உங்கள் உதவி தேவையில்லை, நீங்கள் திரும்பிச் செல்லலாம்” என வாதாடுவார்கள். அவர்களிடமும் நாங்கள் சிறிது நேரம் முன்னரே குறிப்பிட்ட அம்சங்கள் அடிப்படை யில் வாதாட வேண்டியிருக்கும். ஒரு சிலர் இதை மறுத்து எங்களிடம் வாதாடினாலும் இதர பலர் எங்களை புரிந்து கொண்டு ஊர் மக்களைச் சந்திக்க அனுமதித்து விடுவார்கள். இதன்பிறகு ஊர் மக்களுடன் நாங்கள் இரண்டறக் கலந்து விடுவோம். சாதிய மோதல்களாலும், சாதிய ஒடுக்கு முறைகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் இம்மக்களை தற்காத்துக் கொள்ளும் ஏற்பாடுகளும் மேற்கண்ட தடை களில் இருப்பதை நாங்கள் அறியாதவர்கள் அல்ல. ஆயினும், சாதியாக இம்மக்களைத் திரட்டும் முயற்சிகளும் இந்த ஏற்பாடுகளில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தலித் அல்லாத இதர சாதி மக்களை சாதிய சக்திகள் சாதி ரீதியாக திரட்டி இம்மக்களுக்கு எதிராக நிறுத்தும்போது, அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தாங்களும் சாதியாகத் திரண்டால் என்ன தவறு என்ற பார்வையும் பாதிக்கப்பட்ட இம்மக்களிடம் உள்ளது என்பதை புறக்கணிக்கக் முடியாது. எனவே, காவல்துறையினரிடம் நாங்கள் செய்த கடுமையான வாக்குவாதம் தவிர இதர பகுதியினரிடம் நாங்கள் அவர்கள் ஏற்கத் தக்க முறையில்தான் வாதங்களை முன்வைத் தோம். மேலும் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் நாம் தலித் மக் களைப் பற்றி சரியான பார்வையில் உள் ளோம், இவர்களில் கணிசமானவர்கள் அன்றாட உழைப்பாளிகள்; தங்களுக்குச் சொந்தமாக நிலமோ இதர உடமையோ இல்லாதவர்கள் - சரியாகச் சொன்னால் சமூக ரீதியாக ஒடுக்கப் பட்ட தொழிலாளி வர்க்கப் பிரிவினர் தான் இவர்கள். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்காமல் தலித் மக்களை அணி திரட்ட முடியாது.
இவர்களை அணி திரட்டாமல் தொழிலாளி வர்க்க ஒற்றுமை முழுமையடை யாது. இப்பார்வையுடன் தான் இம்மக்களு டன் தொடர்பு கொள்ளவும், இவர்களை அணி திரட்டவும் தனித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கிராமங்களுக்குள் நுழைந்த பிறகு அம்மக்கள் மீதான சாதிய சக்திகளின் தாக்கு தலுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து விட்டு நாங்கள் பேச ஆரம்பித்தோம். அவர் களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையை யும் தரக்கூடிய வகையில் எங்களது அணுகு முறை இருந்தது. நாங்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்தோம். எங்களது முயற்சிகள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின. அதன்பிறகு அவர்கள் எங்களிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்கள். நீண்ட காலம் தங்களுக்கு மறுக்கப் பட்ட சட்டப்பூர்வமான சமூக உரிமைகளை தாங்கள் பெற முயற்சித்ததால் சாதிய சக்திகள் ஆத்திரமடைந்து தங்களை தாக்கியதாக அம்மக்களிடையே இருந்த படித்த இளைஞர்கள் ஆவேசத்துடன் கூறினர். தாங்கள் எவ்வாறு தாக்கப்பட்டோம், தகாத சொற்களால் இழிவு படுத்தப்பட்டோம், தங்களிடமிருந்த சின்னச் சின்ன உடமைகள் கூட சேதப்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் எடுத்துக்கூறிய போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் கூறிய முழு விபரங் களையும் நாங்கள் குறித்துக்கொண்டோம். ஒவ்வொரு கிராமத்திலும் சில மணி நேரம் அவர்களுடன் இருந்து பல உண்மைகளைத் தெரிந்து கொண்டோம். கிராமங்களிலிருந்து திரும்பிய பிறகு, ஒவ்வொரு கிராமத்திலும் சாதிய சக்திகள் நடத்திய தாக்குதல்கள், அட்டூழியங்கள் குறித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட சேதா ரங்கள் குறித்தும் - இவ்வாறு செய்த குற்றவாளிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அம்பலப்படுத்தினோம். மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தினோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் கட்சி மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி னோம். இந்த கண்டன இயக்கங்களுக்கும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை களைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பார்கள். தாக்கு தலுக்குள்ளான மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி யுள்ள நிலையில் அதற்கு எதிராக நாங்கள் குரல்கூட கொடுக்கக் கூடாதா என காவல்துறை அதிகாரிகளிடம் எதிர் வாதம் செய்வோம். எனினும், அவர்கள் அனுமதிக்க மறுப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். இறுதியாக “நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம், உங்களால் அதை தடுக்க முடியாது” என உறுதிபட தெரிவித்துவிட்டுத் தான் காவல் நிலையங்களிலிருந்து வெளியேறுவோம். பிறகு, குறிப்பிட்ட தேதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம். சில இடங்களில் கடைசி நேரத்தில் அனுமதி கொடுப்பார்கள். வேறு சில இடங்களில் எங்களை கைது செய்து பகல் முழுவதும் காவலில் வைத்திருந்து மாலையில் விடுவிப்பார்கள். அடுத்து அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார்களா? என்பதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறதா? என்பதை யும் தொடர்ந்து கண்காணிப்போம். அவ்வாறு நடைபெற வில்லையெனில் மீண்டும் தலையீடுகளைச் செய்வோம், தேவையெனில் போராட்டங்களையும் நடத்துவோம்.
பல பிரச்சனைகளில் நீதிமன்ற வழக்கும் தொடுத்துள்ளோம். சாதிய மோதல் நடைபெற்ற காலங்களில் பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு நாங்கள் சொல்லும்போது எவ்வாறு பல தடைகளை எதிர்கொண்டு அவற்றை சமாளித்து கிராமங்களுக்குள் சென்றோம் என்பதை மேலே விவரித்துள்ளோம். முதல்முறை செல்லும்போது தான் எங்களுக்கு இந்த அனுபவம். இடதுசாரி இயக்கத்தின் அணுகுமுறையை புரிந்து கொண்ட அவர்கள் அதன்பிறகு தொடர் நட வடிக்கைகளுக்காக பிற்காலத்தில் நாங்கள் பலமுறை அக்கிராமங்களுக்குச் சென்ற போது எவ்வித தடையோ, ஆட்சேபனையோ தெரிவிக்காமல் எங்களை அனுமதிப் பார்கள் என்பதே உண்மையாகும். அதுமட்டுமல்ல, இக்கிராமங்கள் பலவற்றிலும் இடதுசாரி வெகுஜன அமைப்புகளை உருவாக்கும்போது அவற்றில் தயக்க மின்றி அம்மக்கள் இணைந்து கொள்வதையும் கண்கூடாக கண்டோம்.