தேனி, ஏப்.11- மதுரை சித்திரைத் திருவிழா விற்காக வைகை அணையில் இருந்து திங்களன்று மாலை முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளது. தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக் கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண் ணீர் திறந்து விடப்பட்ட நிலை யிலும், நீர்மட்டம் தற்போது வரை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திரு விழாவிற்கு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண் ணீர் திறந்து விடுவது வழக்கம்.
சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்தே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அணையில் தண்ணீர் திறந்து விடு வதற்கு போதுமான சூழ்நிலை கள் இல்லாத நேரத்தில், வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி, அதில் தண்ணீரை நிரப்பி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடை பெறும். இந்நிலையில் வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால், இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடிவு செய் யப்பட்டது. அதன்படி திங்களன்று மாலை 5 மணி அளவில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து மூன்று முறை அபாய ஒலி எழுப் பப்பட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர். தண்ணீர் சிறிய மதகு களின் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. மேலும் ஆற்றின் வழி யாக தண்ணீர் திறந்து விடப்ப டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதி காரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். வைகை அணையிலிருந்து ஏப்ரல் 16-ஆம் தேதி காலை வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு தண் ணீர் திறந்து விடப்படும். மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ள தாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.