districts

img

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

விருதுநகர், நவ.11- சுத்தமான குடிநீர் வழங்குவதோடு, கௌசிகா ஆற்றை தூர் வார வேண்டும் என விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 24 ஆவது வார்டு  குழுக் கூட்டத்தில் பொது மக்  கள் தீர்மானம் நிறைவேற்றி னர்.  இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் கோ. ஜெயக்குமார் தலைமை வகித்தார். வார்டு செயலா ளர் அருண் முன்னிலை வகித்  தார். நகர்நல அலுவலர் யோகேஷ், சுகாதார ஆய்வா ளர் சீனிவாசன் ஆகியோர் வார்டு குழுக்களின் பயன் கள் குறித்தும், சுகாதாரத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசி னர். முடிவில், நகராட்சி நிர்வா கம், உப்பு சுவையுள்ள குடி நீரை வழங்குவதை நிறுத்தி சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். பாத்திமாநகர் ஆற்றுப்பாலம் பேருந்து நிறுத்தம் எதிரே ஆண்-பெண்  களுக்கான சிறுநீர் கழிப்பி டம் கட்டித் தர வேண்டும். கௌசிகா ஆற்றில் கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே, கௌசிகா ஆற்றில் உள்ள  சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். சேதமடைந்துள்ள சாலை களை சீரமைக்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்  படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை வாறுகாலை மொத்த  பணிகள் மூலம் சுத்தப் படுத்த வேண்டும். ஓட்டை  விழுந்துள்ள சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் இதில், வார்டு குழு உறுப்பினர்கள் எல். முருகன், ஆர்.முருகேஸ் வரி, ஐ.ஜெயா, பி.ஸ்டாலின் உட்பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.