districts

img

வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்

தேனி, செப்.12- தேனி மாவட்டத்தில் அதிமுக பிர முகருக்கு முறைகேடாக பட்டா வழங்  கப்பட்டு, அதைத் தொடர்ந்து நடை பெற்ற போராட்டத்தால் பட்டா ரத்து செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை சம்மந்தப்பட்ட நிலத்தை அரசு வாக்குறுதிப்படி வீட்டுமனையில்லாத பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் உத்தமபாளை யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருப்புப் போராட்டம் நடைபெற் றது. தேனி மாவட்டம் சின்னமனூர் நக ராட்சிக்குட்பட்ட பொன் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்த மான நிலத்தை அதிமுக நிர்வாகி உள்  ளிட்ட பல நபர்களுக்கு பணத்தை  பெற்றுக்கொண்டு வருவாய்த்துறை யினர் பட்டா வழங்கினர்.  பல கோடி பெறுமான அந்த நிலத்தை அவர்கள் மனைப்பிரிவாக்கி விற்பனை செய்யத் திட்டமிட்ட நிலை யில் வீடற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் விடுதலை களம் சார்பில்  கடந்த தொடர் போராட்டம் நடத்தப்பட்  டது. அதன் விளைவாக அதிமுக பிர முகருக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து  செய்தனர்.  ஆனால, அந்த நிலத்தை அரசின் வேறு பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மக்கள்  போராட்டத்தில் அப்பணி நிறுத்தப்ப டது.  இந்த நிலையில் உத்தமபாளையம் கோட்டாட்சியர், போடி காவல் துணைக்  கண்காணிப்பாளர் ஆகியோர் கடந்த  ஜூலை மாதம் 21-ஆம் தேதி கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். நிலத்தை வேறு பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லக் கூடாது என வலி யுறுத்தி உத்தமபாளையம் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்  வாய்க்கிழமை காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு பரிமாறப்பட்டது. தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், ஒன்றி யச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல். ஆர்.சங்கரசுப்பு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.லெனின், தீஒமு  மாநிலச் செயலாளர் எஸ்.முத்துராணி,  மாவட்டச் செயலாளர் இ.தர்மர், மாவட்டத் தலைவர் டி.கே.சீனிவாசன்,  தமிழர் விடுதலை களம் மாவட்டச் செய லாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மு.இப்ராகிம், என்.அம்சமணி, ஏரியா செயலாளர் எஸ். லட்சுமணன், சின்னமனூர் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பால்பாண்டி மணிகண்டன், ஈஸ்வரி, முருகேசன், பாண்டி உட்பட 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர் . போராட்டத்தில் ஈடுபட்டவரகளு டன் கோட்டாட்சியர் பால்பாண்டி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, “வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் .குறிப்பிட்ட இடத்தில் வேலி அமைக்கும் பணி நிறுத்தப்படும் என்றார். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.