தூத்துக்குடி, மார்ச்.12- தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி யில் ஸ்மார்ட் போன் பழுது நீக்குதல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி யில் பயிலும் மாணவர்களுக்கு கற்கும் பொழுதும், படித்து முடித்தப் பிறகும் வரு மானம் ஈட்டும் விதமாக, திறன் வளர்க்கும் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இயற்பியல் துறை சார்பாக “ஸ்மார்ட் போன் பழுது நீக்குதல் பயிற்சி பட்டறை மார்ச் 9 தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சியை கோயம்புத்தூரில் உள்ள ‘‘நியூ டெக்னாலஜி’’ நிறுவனத்தினர் மாண வர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்வை இயற்பியல் துறை பேராசிரியர்கள் ஜான் பிரிண்ஸ் சௌந்திரநாயகம் மற்றும் சு. சுபா ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு வாழ்த்துரை வழங்கினார். நியூ டெக்னா லஜி நிறுவனத்தை சார்ந்த பயிற்சியாளர் கார்த்திக்கேயன் சிறப்புரை ஆற்றினார். இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் முரளி நாராயணன் தலைமை வகித்தார். மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாண வர்கள் ஜெப்ரின் மேரி, கிரேனா ஞான ராஜாத்தி மற்றும் ஜெ.டேவிட் ஸ்மித் ஆகி யோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் அமுதவல்லி, நாகராஜன், சுப்பிரமணியன் மற்றும் இன்பான்ஷியா டாப்னி பெர்னாண்டோ கலந்து கொண்டு சிறப்பித்தனர்.