districts

img

குழித்துறை நகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வம் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு

குழித்துறை, பிப்.19- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 21-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பொது மக்கள் வரிசையில் நின்று ஆர்வமு டன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குழித்துறை நகராட்சியை பொறுத்தமட்டில் 21-வார்டுகளுக்கு  22- வாக்கு பதிவு மையங்கள் அமைக் கப்பட்டு முன்னேற்பாடாக வாக்கு பதிவு மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் வெள்ளியன்று முடிவடைந்தது. இந்நிலையில், குழித்துறை நகரா ட்சிக்கு உட்பட்ட  22-வாக்கு பதிவு மையங்களில் சனியன்று காலை வாக்கு பதிவுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடு பட்டனர். முதற்கட்டமாக தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னி லையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன .பின்னர் இயந்திரங்கள் சீலிடப்பட் டநிலையில் வாக்கு பதிவு தொடங்கியது.  இதனையடுத்து வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பொதுமக்கள் அச்சமின்றி ஆர்வத்துடன் வாக்களிக்கும் விதத்தில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.