மதுரை, அக்.15- சான்றிதழ்தாரர்களுக்கு எம்எஸ்டிஇ பரிந்துரைப்படி முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு சிபிடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். கணி தம் மற்றும் வரைபடம் பாடப் பிரிவில் பயிற்சி நேரம் குறைத்ததை ரத்து செய்ய டிஜிடி யை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிஓஇ, பிபிபி பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர் களை ஒன்றிய - மாநில அரசுகள் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளைத் தலைவர் மா.சேகர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் அண்டோ, கிளை பொருளா ளர் முத்துவேல் ஆகியோர் பேசினர். நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியா ளர்கள் சங்க மாநில பொருளாளர் இரா. தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராமதாஸ் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். மாவட்டச் செய லாளர் க. நீதிராஜா நிறைவுரையாற்றி னார்.