districts

ஆவின் தனி அலுவலராக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் பொறுப்பேற்பு

விருதுநகர், மார்ச் 30- விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகக்  குழு கலைக்கப்பட்டு தனி அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நியமிக் கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆவின் தலை மை அலுவலகம் திருவில்லிபுத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம்  ஆண்டில் ஆவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22 இல் 2 மேலாளர்கள், 5 துணை மேலா ளர்கள், 8 ஓட்டுநர்கள் உள்பட 25 பணி யிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இப்பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார்  எழுந்தது. இதையடுத்து கடந்த 2022 ஆம்  ஆண்டு பிப்ரவரி மாதம் இதுகுறித்து விசா ரணை நடத்த பால்வளத்துறை ஆணையர்  உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால் வளத்துறை சார்பு ஆய்வாளர் விசா ரணை மேற்கொண்டார். அவர் கடந்த 2022 டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4  அன்று சம்பந்தப்பட்ட பணி நியமனங்கள்  அனைத்தையும் ரத்து செய்து பால்வளத் துறை ஆணையர் உத்தரவிட்டார். மேலும்,  மார்ச் 16இல் ஆவின் நிர்வாக குழு கலைக்  கப்படுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொறுப் பேற்றுக்கொண்டார்.