மதுரை, மே 7- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வ. புதூர் கிராமத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று கூறியும் இந்த பேருந்தில் அரசுப் பள்ளி மாணவ மாணவி கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்காக வெளியூர் செல்லும் தொழிலாளர்களும், விவசாய இடுபொருட்கள் கொண்டு செல் லும் விவசாயிகள் குறித்த நேரத்திற்கு போக முடியவில்லை என்று கூறி அந்த கிராம பொதுமக்கள் அரசு போக்குவரத்து அதிகாரி களிடம் ஒரு மாதத்திற்கு முன்னரே மனு வழங்கினர். நடவடிக்கை கோரி பலமுறை வலி யுறுத்தியும் அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் அலட்சியமாக இருந்ததால் கோப மடைந்த கிராமமக்கள் மே 6 வெள்ளியன்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புதூர் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன், அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் பேருந்து போக்கு வரத்து சரியான முறையில் இயக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.