சின்னாளப்பட்டி, ஏப்.7- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சியில் பாளையங்கோட்டை, கூலம்பட்டி, பிர வான்பட்டி, காமன்பட்டி உட்பட ஏழு கிரா மங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்க ளாக இந்த ஊராட்சியில் வீட்டு வரி வசூல் செய்து வருகின்றனர். இதில், குறிப்பாக சொந்த வீடு இருந்து, அந்த வீட்டிற்கு வீட்டு வரி செலுத்தினால் மட்டும் அவர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும் என பாளையங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இத னால், அதிர்ச்சி அடைந்த சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் 100 நாள் வேலை கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த மக்கள் பாளையங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சீனியம்மாள் தலைமையில், செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகை யிட்டனர். பின்னர், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் ஊராட்சி அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை திமுக ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உடனி ருந்தனர்.