பிரதமர் மோடி சிம்லாவில் நடைபெற்ற அரசு விழாவில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கலந்துரையாடினார். இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆட்சியர் சங்கர் லால் குமாவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கே.ஜே.பிரவீண் குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.