districts

img

திருமணம் செய்து ஏமாற்றிய கணபதி சில்க்ஸ் உரிமையாளர் நீதி கேட்டு பாதிக்கப்பட்ட பெண் 3 ஆவது நாளாக போராட்டம்

தேனி,ஜூன்.3 இளம் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய, ஜாமீனில் வந்துள்ள  தேனி  கணபதி சில்க்ஸ் உரிமையாளர் முருகனை சேர்ந்து வாழ வைக்கக் கோரி தேனி கணபதி சில்க்ஸ் ஜவுளி கடையில் பாதிக்கப்பட்ட பெண் 3 ஆவது நாளாக வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டார் .  பெரியகுளம் அருகே டி.காமக்கா பட்டியை சேர்ந்த சின்னகருப்பன் மகள் மேனகா (வயது 29). இவர் எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார். இவர்  தேனி யில் உள்ள கணபதி சில்க்ஸ் கட்டி டத்தில், அழகுசாதன பொருட்கள் விற்பனை ஷோரூம் நடத்தி வந்தார்.அப்போது  அந்த ஜவுளிக்கடை உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகன் என்னுடன் நட்பாக பழகி வந்த நிலையில் மார்ச் 8 ஆம் தேதி திரு மணம் நடந்துள்ளது .கழுத்தில் தாலி யை கட்டி விட்டு சென்ற பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து  அமெரிக்காவில் குடியேறப்போவ தாகவும், என்னை திருமணம் செய்தது  நாடகம் என்றும் முருகன் தெரிவித்துள் ளார் . மேனகா அளித்த புகாரின் பேரில் தேனி மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீனில் முருகன் வெளிவந்துள்ளார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய முருகனை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்கும் படி கடந்த 3 மூன்று நாட்களாக தேனி கணபதி சில்க்ஸ் கிளையில் போராட்டம் நடத்தி வருகிறார் . போட்டி போராட்டம்  இந்நிலையில் கணபதி சில்க்ஸ் உரிமையாளர் தூண்டுதலின் பேரில் கடை பணியாளர்கள் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்து ,கடையில் மேனகா போராட்டம் நடத்தி அமைதியை குலைப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் மனு அளித்தனர்