தூத்துக்குடி, டிச. 27 ஆழ்வார்திருநகரி ஒன்றியம் தென்திருப்பேரை கிராமத்தில் வெண்மணி தியாகிகள் தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.பூலான் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழ்வார்திருநகரி ஒன்றி யச் செயலாளர் செ.ரவிச் சந்திரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் விவசாய சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் ஐ.கணபதி, ஒன்றியப் பொருளாளர் புலிராஜ், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் ஆனந்த், பிரசன்னா, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.