districts

img

வீரத்தாய் குயிலி 242 ஆவது நினைவேந்தல் அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை

சிவகங்கை, அக்.5- தனது உடலில் தீவைத்துக் கொண்டு  ஆங்கிலேயர்களின்  ஆயுதக் கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த வீரத்தாய் குயிலியின் 242 வது நினைவேந்தல் அக்டோ பர் 5 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரத்தாய் வேலுநாச்சியார் நினைவுமண்டப வளாகத்தில் உள்ள வீரத்  தாய் குயிலி  நினைவுச்சின்னத்தில்  ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப் பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.   இந்நிகழ்வில் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, திருப்புவனம்  பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவ கங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்  குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி,  சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலக நாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா,குயிலி அறக்  கட்டளை பொறுப்பாளர் கணேசன், தலித்  விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா மற்றும் திரளானோர்  மரி யாதை செலுத்தினர்.