தேனி ,மே.13- வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு அலங்காரத்துடன் மலர்விமானம், முத்துப் பல்லக்கு, புஷ்பபல்லக்கு நடைபெற்றது. விழாவின் உச்சநிகழ்ச்சியாக வெள்ளிக் கிழமை மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தேருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆட்சியர் க.வீ.முரளீதரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் சரக டிஐஜி. ரூபேஷ்குமார்மீனா, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரோ, எம்பி.ரவீந்திரநாத், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, ஆண்டி பட்டி எம்எல்ஏ.மகாராஜன் ஒன்றியக்குழு தலைவர் எம் .சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில் அருகே திருத்தேர் நிலை நிறுத்தப்பட்டது. பின்பு ஒவ்வொரு நாளும் தெற்குரதவீதி, மேற்கு ரதவீதிகளில் தேரோட் டம் நடைபெற்று,வரும் 16-ம் தேதி தேர் நிலை நிறுத்தப்படுகிறது.வரும் 17-ம் தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.